சொரூபா · @i_Soruba
13th Aug 2014 from TwitLonger
பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்
இரவு ஒரு கொடுங்கனவு வந்தது
காலை ஒரு சிறுகவிதை உதித்தது
பேருந்தில் உன்சிரிப்பை ஒத்த
கைக்குழந்தை என்னிடம் தாவிற்று
இறங்கும்போது கால் இடறி
பெருவிரல் நகம் பெயர்ந்தது
நீ பரிசளித்த ரோஜாச்செடி
உன் கோபத்தின் நிறத்தில் பூத்திருக்கிறது
தொட்டிமீன் ஒன்று செத்துப்போயிற்று
பூ மிதித்த பக்கத்துவீட்டு அக்காவின்
காலெல்லாம் கொப்புளங்கள்
எல்லாமும் சொல்லவேண்டும்..பேசிவிடு.
குறுஞ்செய்தி ஒன்றனுப்பி கொள்வதோ
பேசாமலே விடுத்து கொல்வதோ
சட்டென முடிவு செய்.
நேரம் கூடக்கூட
நிறைய காதல் கேட்பேன்.