புலி பாடும் பாட்டு


புலி படத்தில் கதாநாயகன் விஜய் - கதாநாயகி ஸ்ருதிஹாசன் இணைந்து பாடும் காதல் பாடலை ரசிகர்களுக்கு முதலில் வாசிக்கத் தருகிறேன். இன்று வரி வடிவில்; நாளை ஒலி வடிவில். தேவிஸ்ரீ பிரசாத் நல்லிசை வழங்கியிருக்கிறார். சிம்புதேவனின் முயற்சி வெற்றிபெறும். வாழ்த்துக்கள்..!!!

ஆண் : வானவில் வட்டமாகுதே
வானமே கிட்ட வருதே
பெண் : மேகங்கள் மண்ணில் இறங்கி
தோகைக்கு ஆடை கட்டுதே
ஆண் : இரவெல்லாம் வெயிலாகிப் போக
பகலெல்லாம் இருளாகிப் போக
காலங்கள் வேஷம் போடுதே
அடி ஏண்டி ஏண்டி என்ன மாத்துற?
ரெண்டு பூவக் கொண்டு என்னத் தாக்குற
அடி ஏண்டி ஏண்டி கண்ணச் சாய்க்கிற?
எம் புத்திக்குள்ள கத்தி வீசுற
*
ஆண் : கட்டி கட்டி தங்கக் கட்டி
கட்டிக்கொள்ளக் கொஞ்சம் வாடி
பெண் : கட்டிக் கொள்ளக் கொட்டிக் கொடு
நட்சத்திரம் ஒரு கோடி
ஆண் : ஏ அழகின் மானே
வா மடிமேலே
பெண் : புள்ளிமான் புடிபட்டுப் போச்சு
புலி கையில் அடிபட்டுப் போச்சு
விடுபட்டு எங்கே போவது?
ஆண் : ஏண்டி ஏண்டி என்ன மாத்துற
ஏண்டி ஏண்டி என்ன ஏய்க்கிற
ஏண்டி ஏண்டி பூவாப் பூக்குற
ஏண்டி ஏண்டி பூவால் தாக்குற

*
ஆண் : பிஞ்சு மொழி சொல்லச் சொல்லப்
பேச்சுக்குள்ள தோடி ராகம்
பெண் : முத்தமிட்டு மூச்சுவிட்டா
மூச்சுக்குள்ள ரோஜா வாசம்
ஆண் : தேன் வழியும் பொன்னே
வா கமலப் பெண்ணே
பெண் : இடைதொட்டுக் கொடிகட்டிவிட்டாய்
கொடிகட்டி மடிதொட்டுவிட்டாய்
மடிதொட்டு எங்கே போகிறாய்?
ஆண் : ஏண்டி ஏண்டி என்ன மாத்துற
ஏண்டி ஏண்டி என்ன ஏய்க்கிற
ஏண்டி ஏண்டி பூவாப் பூக்குற
ஏண்டி ஏண்டி பூவால் தாக்குற

Reply · Report Post