இரண்டாம் பாடல்


நன்மை செய்து துன்பம் பெற்ற ரஜினியின் உடைந்த மனதுக்கு ஆறுதல் சொல்லும் பாடல்

உண்மை ஒருநாள் வெல்லும் – இந்த
உலகம் உன்பேர் சொல்லும் - அன்று
ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா

பொய்கள் புயல்போல் வீசும் – ஆனால்
உண்மை மெதுவாய்ப் பேசும் – அன்று
நீயே வாழ்வில் வெல்வாய்

கலங்காதே
கலங்காதே
கரையாதே

ராமனும் அழுதான்
தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை
உனக்கோ அழிவில்லை

ஆணியாகப் பிறந்தாய் - உனக்கு
அடிகள் புதிதில்லை

கலங்காதே
கலங்காதே
கரையாதே

*
சிரித்துவரும் சிங்கமுண்டு
புன்னகைக்கும் புலிகளுண்டு
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு

பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு

பள்ளத்தில் ஓர்யானை வீழ்ந்தாலும் - அதன்
உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது

*
சுட்டாலும் சங்கு நிறம்
எப்போதும் வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே

கெட்டாலும் நம்தலைவன்
இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல்கரம் வீழாது தானே!

பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் - அவன்
புன்னகையைக் கொள்ளையிட முடியாது

Reply · Report Post