வைரமுத்து · @vairamuthu
13th Nov 2014 from TwitLonger
முதல் பாடல் "ராஜா ராணி உடைகளில் ரஜினியும் - சோனாக்ஷி சின்ஹாவும் பாடும் பாடல்"
பெண் : என் மன்னவா! மன்னவா!
என்னைவிட அழகி உண்டு - ஆனால்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை – ஆமாம்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை
பெண் : சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் - இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கி விட்டாய்
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
உன் கண்களோ உன் கண்களோ
பூ தேடுதே
உன் கைகளோ உன் கைகளோ
வேர் தேடுதே
பெண் : நூறு யானைகளின்
தந்தம் கொண்டு ஒரு
கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம் கொண்டு அந்தக் கவசம் உடைத்து
உன் மார்பில் மையமிட்டேனே
ஆண் : தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே
பாலன்னம் நீ – நான்
பசிகாரன் வா வா
மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்திவை ராணி
ஆண் : வெய்யில் பாராத
வெள்ளைப் பூக்களைக்
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்றமன்னன் உன்
கால் சுண்டுவிரல் கேட்டேனே
பெண் : சிற்றின்பம் தாண்டிப்
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே
மோன வடிவே
என்னைக் கூடல்கொள்ள வா
கொற்றவை மைந்தா
ஆண் : சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தேன் - இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கி விட்டேன்
பெண் : அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?