திரு 🖤❤ · @thecommonman__
7th Oct 2013 from TwitLonger
மிஷ்கின் பேசியது - என் நினைவில் இருந்ததை எழுதியிருக்கிறேன். சிலவற்றில் எக்ஸாட்டா அதே வார்த்தைகள் இருக்காது.. ஆனா சாரம்சம் இது தான்..நிறைய மறந்தும்போச்சு.
"படம் எடுக்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா சார்....எடுத்துப்பாருங்க. என் சிதையை எரிச்சி இந்த படத்த எடுத்திருக்கேன்..இதுக்கு கை தட்டுங்க... நான் ஒரு பிச்சைக்காரன் சார்... ரோட்ல டிராபிக் சிக்னல எவன் பொய்யா பிச்சை கேட்கறாவன், எவன் கைய மடக்கிவச்சி ஊனம்ன்னு சொல்லி பிச்ச கேட்கறான், எவன் உண்மையா பிச்ச கேட்கறான்னு கரெக்டா கண்டுபுடிச்சிடுவீங்க.
நான் கலை பிச்சைக்காரன்...உண்மையான பிச்சைக்காரன்...என்னை துரத்தாதீங்க...
நான் வந்ததுல இருந்து தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன்...அவ்வளவு கோபம். நடுவுலயே எழுந்து போயிருப்பேன்...அப்புறம் இவனுக்கு மதிக்கதெரியலன்னு அதையும் எழுதுவாங்க
இங்க ஒருத்தர் கேட்டார், ஏன் அவனே தூக்கிட்டு சுமந்தான்,108க்கு போன் பண்ண வேண்டியது தானேனு. அந்த காட்சிய நல்லா பாருங்க...நிறைய பேரு வந்து பார்ப்பாங்க.. பேஸ்புக்ல போட போட்டோலாம் எடுப்பாங்க...ஆனா யாரும் உதவ மாட்டாங்க. இவன் டாக்டர், வந்ததும் கழுத்துல கைவச்சி பார்ப்பான்...108க்கு போன் பண்ணி அவுங்க வர்றவரைக்கும் நேரம் இல்லன்னு தெரியும்..அதான் சுமந்தான். அவன் சுமந்தது என்ன தெரியுமா.. சிலுவை. ஆரம்பத்துல சிலுவையை பின்னாடி சுமந்தவன் முடிவுல முன்னாடி சுமக்கிறானே..அதை யாராவது கவனிச்சீங்களா?
spleen remove பண்ணவன் எப்படி உடனே எழுத்து நடந்தான்னு கேட்கறாங்க. சினிமா என்பது possible vs impossible இல்ல...அது probable vs improbable. ஒரு டாக்டர் கிட்ட கேட்டேன் Splenectomy பண்ணவன் எவ்ளோ நாள்ல நடக்கமுடியும்ன்னு...8 நாள்ன்னு சொன்னார்...நிச்சயம் 8 நாளான்னு கேட்டேன்...இல்ல 4,5 நாள்ல நடந்தவங்களும் இருக்காங்க...இது மாதிரி முன்னாடி எதாவது நடந்திருக்கன்னு கேட்டேன்..இருக்குன்னு சொன்னார்...எனக்கு அது போதும்.. இந்த Splenectomy பத்தி 3 மாசம் ரிசர்ச் பண்ணியிருக்கேன்...முப்பதுக்கும் மேற்ப்பட்ட டாக்டர் கூட பேசியிருக்கேன்..அந்த காட்சிய இயக்குனதே ஒரு மூத்த டாக்டர் தான். இவ்ளோ லாஜிக் நீங்க பார்க்கும் போது...அது எனக்கு தோனியிருக்காதா? என் அஸிஸ்டன்ட் டைரக்டர்ஸ் கேட்டிருக்கமாட்டாங்களா? எங்களும் அறிவு இருக்கு சார்..அப்பப்ப ஸ்பார்க் வரும்..நம்புங்க
நான் நிறைய படிக்கறேன்...உங்களுக்கா படிக்கறேன்...நீங்க குடுக்கற 150 ரூபாய் காசுக்காக படிக்கறேன்..உங்களால படிக்கமுடியாததனால என்கிட்ட காசு குடுத்து படிக்க சொல்றீங்க...மூணுமாசம் ரிசர்ச் பண்ணத உங்களுக்காக மூணு நிமிஷத்துல எடுத்துத்தரேன்... இன்னிக்கு டாய்லெட்ல கூட படிச்சிக்கிட்டு தான் இருந்தேன்...இப்ப பைபில்,குரான் பத்தி ரிசார்ச் பண்றேன்... structures பத்தி படிச்சிக்கிட்டிருக்கேன்
இங்க ஒருத்தர் flashback சொல்லியிருக்க தேவையில்லன்னு சொன்னாரு... flashback தான் சார் வாழ்க்கை...ஒரு பொண்ணுகிட்ட் ஐ லவ்யூ சொல்றீங்க..அது flashback தான். நேத்து உன்ன பார்த்தேன் நீ அழகா இருந்தன்னு சொல்றீங்க...அது flashback தான். flashback இருந்தா தான் காலைல எந்திரிச்சா அவ உன் அம்மா..இல்ல ஒரு பொம்பள அவ்ளோ தான்...
நம்ம வாழ்க்கையே ப்ளாஷ்பேக்கால் ஆனது தான்...அத சொல்றதுல என்ன தப்பு?
இந்த உலகமே அசிங்கங்களால் ஆனாது... நீங்க ரோட்ல போறப்ப ஒவ்வொரு திருப்பத்துலயும் ஒரு அசிங்கம் இருக்கும்.. ஒரு திருப்பத்துல குடிகாரன் கெடப்பான், ஒரு திருப்பத்துல விலைமாது இருப்பா, ஒரு திருப்பத்துல சாக்கடை இருக்கும்..இந்த அசிங்கங்கள் இருந்தா தான் உலகம் அழகா இருக்கும்... உங்க அம்மா உங்களுக்கு சாப்பாடு போடறங்க..வேலை பளுவால ரெண்டு நாள் குளிக்காம , நாலு நாள் துவைக்காத புடவையோட சரியா கழுவாத கரண்டியால சாப்பாடு எடுத்து இன்னும் கொஞ்சம் போட்டுக்க ராசான்னு கேட்பா...அது தான் சார் அழகு
நந்தலால படம் வந்தப்போ என்னை அப்படியே கொன்னு போட்டாங்க...காப்பின்னு. அது என் அண்ணோட கதை. அவன் மனநல ஆஸ்பத்திரில இருந்தான்...அந்த படத்த பார்த்தப்போ என் அண்ணன் ஞாபகம் தான் வந்தது... என் அண்ணன் கதைய இவன் எடுத்திருக்கானேன்னு ஆச்சரியப்பட்டேன்... ரெண்டு படத்தையும் ப்ரேம் பை ப்ரேமா பிரிங்க.. சொல்லுங்க அதுல எது காப்பின்னு... சில காட்சிகள் அப்படியே வச்சேன்..that is tribute to my master
இன்னிக்கு சினிமால பாட்டு இல்லாம எடுக்க முடியுமா...பாட்டு இல்லாம படம் எடுக்கறேன்னு சொன்னா செருப்பால அடிப்பான் ப்ரோடியுசர். ராஜா சார் கூட ரெண்டு பாட்டு போட்டு தரேன்னு சொன்னார்...நான் "ஏன்ப்பா நீங்களும் என்ன அதுல தள்றீங்க”ன்னு கேட்டேன்..தலைல அடிச்சிக்கிட்டு வாடான்னு மியுசிக் போட்டு கொடுத்தார்... இது ஒரு பூ... நாளை எதாவது ப்ரோடியுசர், என்னடா பாட்டு இல்லாம படம்ன்னு கேட்டா...மிஷ்கின் எடுத்திருக்கான்னு சொல்லுவாங்க..இந்த பூ இப்ப தான் பூத்திருக்கு இத மிதிச்சிடாதீங்க...
நானும் குத்துபாட்டு வச்சிருக்கமுடியும்... நந்தலாலால அவ பாவாட நாடாவ கழிட்டி எனக்கு கட்டும்போது ஒரு செக்ஸ் பாட்டு வச்சிருக்க முடியும் (எனக்கு காட்சி நினைவில்லை..இது மாதிரி தான் என்னமோ சொன்னாரு)...
விமர்சனம் என்ற பேர்ல ஒரு கலைஞன சாகடிச்சிடாதீங்க... தப்பு சொல்றதா இருந்தாலும் ஒன்றரை மாசம் கழிச்சி சொல்லுங்க... உங்க ஒவ்வொருத்தர் வார்த்தைக்கு அவ்வளவு பவர் இருக்கு... டிவிட்டர்ல ஒருந்தர்..பேர் மறந்திடுச்சி (Sridhar Pillaiன்னு ஷாஜி எடுத்துக்குடுத்தார்)...அவர் ப்ரிவியூ பார்த்து போட்ட ஒரு டிவிட் தான் இந்த படம் இவ்வளவு தூரம் ரீச் ஆனாதுக்கு காரணம். அவருக்கு என் நன்றி. உங்க விரல் நுனில இருக்கு ஒரு படத்தோட வெற்றியும் தோல்வியும்...அது விரல் வழியா போய் உங்க மனச தொடணும்..
படத்த பார்க்கப்போறப்பவே நம்மாளுங்க சயிண்ட்ஸ் மாதிரி போவாங்க...குழந்தையா போங்க...அப்ப தான் ரசிக்கமுடியும்
லட்சக்கணக்கான பேரு படத்த பார்த்தாங்க...ஆனா இங்க வரணும்னு நெனச்சது நீங்க மட்டும் தான்..ஏன்னா உங்களுக்கு நல்ல மனசு இருக்கு...அது கால் மொளச்சு இங்க நடந்து வந்திருக்கு... நன்றி!"
பேசிட்டு போனவரு திரும்ப வந்து... "ரெண்டு விஷயம் சொல்ல மறந்துட்டேன்..இந்த விளிம்பு நிலை மனிதர்கள்ன்னு யாரும் இல்ல எல்லாரும் நம்ம மாதிரி மனுஷங்க தான்...அப்புறம் தயவு செஞ்சு திருநங்கைன்னு சொல்லாதீங்க....அவங்க பெண்கள்... இங்க ஆண்,பெண் ரெண்டு பேரு தான் இருக்காங்க..நடுவுல இந்த திருநங்கைகள் வேண்டாம்"