கேள்விக்குறி? · @kelvikuri
25th Apr 2013 from TwitLonger
பாடல்: http://www.youtube.com/watch?v=86RvhBsnNqM
வானம்பாடி கூடு தேடும்
இந்த நேரம் என்ன பாடும்
வந்து இங்கு வாழ்ந்த காலம்
கானல் நீரில் காணும் கோலம்
கசிந்து கண்ணீர் வரும்
சோக ராகம் பாடும் நேரம்
வார்த்தை இங்கு ஊமையாகும்
பழைய காலம் திரும்புமா
வசந்தம் மீண்டும் அரும்புமா
இது ஒரு வேடந்தாங்கல்
கலைகிறோம் இன்று நாங்கள்
பாசமே போ போ மனதை
மறந்து போ...
பாடும் நெஞ்சம் பாரமாகும்
ஏங்கும் கண்கள் ஈரமாகும்
உறவு நம்மை இணைத்ததே
பிரிவு இன்று அழைத்ததே
முகவரி வாங்கிக் கொண்டோம்
முகங்களைத் தாண்டிச் சென்றோம்
விடை பெறும் வேளை
வாரத்தை வரவில்லை...