சின்மயியின் பதிவில் நான் இட்ட மறு மொழி இதனை வெளியிடுவது சின்மயியின் கையில்தான் இருக்கிறது..

-------------

விளக்கமான பதிவுக்கு நன்றி..
இப்பதிவைக் கிட்டத்தட்ட ஒரு ஒப்புதல் வாக்குமூலம் என்றே கருத வேண்டியுள்ளது..

ராசன் ஜெயலலிதாவைப் பற்றிப் பேசியது, கருணாநிதியைப் பற்றிப் பேசியது குறித்து கவலைப்படவும் நடவடிக்கையெடுக்கவும் வேறு ஆள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்..

உங்களுக்கும் ராசன், சரவணக்குமார் இடையில் என்ன நடந்தது எனப் பார்ப்போம்.

இடஒதுக்கீடு சர்ச்சையில் ராசன் இருந்தார்.

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

ஆனால் அவர் விவாததைத் துவக்கவுமில்லை.. தீவிரமாக பங்கு பெறவுமில்லை என்பது தெளிவு.. அவர் ஏதோ "naan madha/jaadhi veriyan" என்று சொன்னதாகவும் அந்த டுவீட் தொலைந்து போனதாகவும் வருத்தப்படுகிறீர்கள்.

மற்றோர் இடத்தில் “சின்னாத்தா” எனச் சொன்னதாகச் சொல்கிறீர்கள்.

பேராசிரியர் சரவணக்குமார் இந்த விவாதத்திலும் இல்லை..

மீனவர் பிரச்சினையில் நீங்கள் சொல்லாத ஒன்றை நீங்கள் சொன்னதாக ராசன் திரித்து விட்டதாக அதாவது “மீனவாளெல்லாம் மீனைக் கொல்றா.. அதனாலே மீனவாளைக் கொல்றது தப்பில்லே - சின்னாத்தா 2010 ல்” என்று திரித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

இதிலும் பேராசிரியர் சரவணக்குமார் இல்லை..


மார்ச் 10, 2012.

#அசிங்கப்பட்டாள்சின்மயி #டேக் போட்டதற்கான காரணத்தையும் நீங்கள் விளக்கியுள்ளீர்கள்..

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் மகேஷ் மூர்த்தியின் கட்டுரையில் ராசன் பெயர் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடன் டுவிட்டரில் சண்டையிட்டுள்ளீர்கள்.. வைரமுத்து, கார்க்கியின் பெயரை பரிந்துரைத்ததாக சொல்கிறீர்கள்.. ராசன் பெயரை நீக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.

மகேஷ் மூர்த்திக்கு தொல்லை கொடுத்து உண்மையிலேயே நீங்கள் அசிங்கப் பட்டிருந்தீர்கள்

பிறகு ராசனும் அவரது நண்பர்களும் #அசிங்கப்பட்டாள்சின்மயி #டேக் போட்டு உங்களை அசிங்கப் படுத்தியிருக்கிறார்கள்..

அப்போதும் பேராசிரியர் சரவணக்குமார் இல்லவேயில்லை..


மார்ச் 29, 2012

அதன்பிறகு உங்கள் அம்மா ஒரு எச்சரிக்கை செய்வதுபோல டுவீட்லாங்கர் போட்டார்.

இதுவரையிலும் பேராசிரியர் சரவணக்குமார் இல்லவே இல்லை.

செப்டம்பர் இறுதி வாரத்தில் ஆறு மாதங்களுக்குப் பிறகு அனைவரும் மறந்து போயிருந்த இந்த விவகாரத்தைக் கையிலெடுத்தார்.. அதற்குக் காரணமாக நீங்கள் வீடு மாறும் வேலைகளில் பிசியாகவிட்டதாகவும் இப்போதுதான் ஃப்ரீயானதாகவும் விளக்கம் வேறு கொடுத்தார்..

இடையில் சிலர் உங்களை பின்தொடர வேண்டி அன்பிளாக் செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுத்தனர்..

உங்கள் அம்மா செந்தில்நாதன் @senthilchn க்கு தொலைபேசியில் பேசி ஆலோசனையோ/மிரட்டலோ செய்திருக்கிறார்.. அதனைத் தொடர்ந்த உரையாடலில் செந்தில்நாதன் உங்கள் அம்மாவைக் ”கடலை போட பயன் படுத்திக் கொள்” பேராசிரியர் சரவணக்குமார் சொல்லிவிடுகிறார்.

பேராசிரியர் சரவணக்குமார் செய்த உச்சகட்ட குற்றம் இதுதானே?
மார்ச் 29 டுவீட் லாங்கர் போட்ட பிறகு ராசன் உங்கள் பெயரைக் குறிப்பிட்டோ உங்களை மென்சன் செய்தோ ஏதேனும் சொன்னாரா? செய்தாரா? அவர் செய்த உச்ச கட்ட குற்றம் #அசிங்கப்பட்டால்சின்மயி #டேக் போட்டதுதானே?

உங்களிடம் நேர்மையிருந்தால் அவர்கள் செய்த தவறுக்கேற்ற வகையில் சரியான பிரிவுகளில் தானே வழக்குத்தொடர்ந்திருக்க வேண்டும்..

அதை விடுத்து ஆபாசப் படங்களை மார்ஃப் செய்து வெளியிட்டதாகவும், செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும், பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் ஏன் பொய்ப்புகார் கொடுத்தீர்கள்?

இது பழியுணர்ச்சியில்லாமல் வேறென்ன?

@செந்தின்சிஎச்என் என்கிற அப்பாவிக்கும் உங்கள் புகாருக்கும் ஏதேனும் தொடர்புண்டா?

@லாஸ்ஏஞ்சல்ஸ்ராம், @செந்தின்சிஎச்என் @விவாஜி இப்போது நடைபெறும் சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்புண்டா? அவர்கள் மீது ஏன் வழக்குத் தொடர்ந்தீர்கள்?

மற்ற நபருடனான உங்கள் பிரச்சினை டுவிட்டருக்கு வெளியில் நடந்தது.. பெண் கேட்டது, படமெடுப்பது என என்னவென்றே யாருக்கும் தெரியாது.. அவரையும் இந்த டுவீட்டர் குழுவோடு சேர்த்தது சதியல்லவா?

வஞ்சம் தீர்க்க இந்த வழிதான் கிடைத்ததா?

நீங்கள் நேர்மையற்றவர் சின்மயி.. துளியளவும் நேர்மையற்றவர்..

Reply · Report Post