kotravai_n

Kotravai · @kotravai_n

25th Oct 2012 from Twitlonger

சின்மயி விவகாரத்தில் அவர் அவர்கள் எடுத்துக்கொள்ளும் இடை வரிகள்:

பாடகி சின்மயியின் சில கருத்துக்கள் அது தொடர்பான எதிர்கருத்துக்கள், அதைத் தொடர்ந்த ஆபாசப் பதிவுகள், ஆணாதிக்கப் பேச்சுக்கள், புகார்கள் கைதுகள் என்று தற்போது அரங்கேறியிருக்கும் ஒரு நிகழ்வில் நிறைய கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. ஊடகங்கள் வாயிலாக (புதிய தலைமுறை, NDTV Hindu) நானும் எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். அதில் அவர் அவருக்கு விருப்பமான, அல்லது சார்பான இடைவரிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் ஒரு ஆபத்து இருப்பதை உணர்கிறேன். அதனால் சில விளக்கங்களை கொடுப்பது அவசியமாகிறது.

இந்த விவகாரத்தில் இரண்டு எதிர்நிலைகளை பெரும்பான்மை மனநிலையாகக் காண முடிகிறது, ஒன்று தமிழ் உணர்வாளர், தலித் ஆதரவாளர் என்பதும் மற்றொன்று அது அல்லாதவர் என்பதும். கண்ணோட்டங்களில் சாதி, வர்க்கம் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்து இந்த பிரச்சனையை மதிப்பிடுவது அவசர புரிதல்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் இட்டுச் செல்வதைக் காண முடிகிறது.

முதலில் ஆணாதிக்கப் பேச்சுக்களை கருத்துச் சுதந்திரம் என்பதில் சேர்த்துக் கொள்ள முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்திருக்கும். இது பிறப்பிலேயே தோன்றுவதன்று மாறாக சமூகமயமாக்கப்படும் ஒரு நிகழ்விலிருந்து தோன்றுகிறது. அது புரிதல் சார்ந்த பிரச்சனை. இந்த புரிதலில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுதல், புன்படும் வகையான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தல் என்கிற அளவோடு அதை நிறுத்துக் கொள்வதே ஜனநாயகம். கருத்தை கருத்தாக பாவிக்காமல் தனி நபர் அவதூறாக, பாலியல் வசைகளாக, தனிப்பட்ட வாழ்வை எடுத்து பேசுவது, குறிப்பாக பாலியல் அடையாளத்தின் அடிப்படையில் ஆணாதிக்க மனோபாவத்தைக் வெளிக்காட்டுவது நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

தனிநபர் பொறுப்புணர்வு, அரசியல் நாகரீகம், பேச்சு நாகரீகம், விவாதப் பண்பு ஆகியவை இல்லாத ஒரு சமூகத்தில் பாதிக்கப்பட்டவர் காவல்துறையை நாடுவதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லை. அந்த வகையில் சின்மயி தன்னையும், தன் தாயையும் இழிவு படுத்தியவர்களுக்கெதிராக புகார் கொடுத்தது வரவேற்கத்தக்கதே. எல்லா நேரமும் பெண்கள் இந்த வன்கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதற்கு முன் உதாரணம். புகாரைத் தொடர்ந்து வரும் விளக்கங்களில் ஆபாசமாகப் பேசியவர்கள் மட்டுமல்லாது எள்ளல் தொணியில் பேசியவர்கள் மீதும் சின்மயி புகார் அளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருந்தால் அது முதிர்ச்சியின்மை. தன்னுடைய பிரபல்ய அடையாளத்தை தவறாக பயன் படுத்தும் ஒரு செயல் என்று முடிவுக்கு வரலாம்.

இப்போது ஊடகங்கள் வாயிலாக நான் பகிர்ந்த கருத்துக்கள்:

NDTV Hindu: தொலைபேசி பேட்டி, இதில் சின்மயி விவகாரத்தை நேரடியாகப் பேசாமல், பெண்களுக்கெதிரான இணையதள குற்றங்கள் என்று பேசினார்கள்.

எனக்கு இனைப்பு கிடைத்தபோது எனது காதில் விழுந்தவை: “இந்த காரணங்களால் தான் சொல்கிறேன் இந்த ஊடகத்திலிருந்து பெண்கள் ஒதுங்கியிருத்தல் நல்லது என்று”

நான் சொன்னது (சொல் வாரியாக நினைவில்லை.. சாரம்): எல்லா நேரங்களிலும் எல்லா எச்சரிக்கையும், ஆலோசனைகளும் பெண்களை நோக்கியே வைக்கப்படுகிறது. பெண்ணாய் இருப்பதால் இந்த சமூக வலைதளங்களில் இப்படித்தான் தொல்லைகள் இருக்கும், அதனால் ஒதுங்கியிருங்கள் என்று சொல்வது தவறு. பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள் என்று சொவது வேறு. அது இரு பாலாறுக்கும் பொருந்தும்.

இதைத் தொடர்ந்து அவர் (காவல்துறை அதிகாரி கருணாநிதி என்று நிகழ்ச்சியின் ஊடே சொல்லப்பட்டது) யார் பாதிக்கபப்டுவார்களோ அவர்களுக்குத்தான் ஆலோசனைகள் வழங்கப்படும்.... முள்ளு மேல சேல விழுந்தாலும்....சேல மேல முள்ளு விழுந்தாலும்....பெண்கள் vulnerable அதனால் தான் சொல்கிறோம் என்பதாகப் பேசினார்.

பெண்கள் வல்னரபுல் என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது, அது சமூகப் பார்வை அதற்கு காரணம் ஆணாதிக்கம்.... பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் என்றால் அந்த பாதிப்பை ஏற்படுத்துபவர்களை எச்சரிக்க வேண்டும் அதை விடுத்து ஒதுங்கியிருங்கள் என்று சொல்வது சரியல்ல...அது அக்கறையிலிருந்தே வந்தாலும் சரியானதல்ல....இது தீர்வை வழங்காது என்றேன்.

அத்தோடு எள்ளல் என்கிற பெயரில் சிலர் அத்துமீறும்போது அவர்களால் மற்றவருக்கு நேரும் இடைஞ்சல்களை கணக்கில் எடுத்துக் கொள்ள தவறுகின்றனர். குறிப்பாக மாற்று அரசியல் பேசுபபவர்களுக்கு இணையம் ஒரு முக்கிய ஊடகமாக இருக்கிறது, இது போன்ற சிலரது தவறான கையாடலால் தணிக்கைகள், முடக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

இறுதியாக பெண்கள் இப்படி வந்து புகார் அளிக்க வேண்டுமா..என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி:

நிச்சயமாகப் பெண்கள் தங்களுக்கெதிரான அத்தனை பாலியல் ஒடுக்குமுறைகளையும் வெளியில் பேச வேண்டும், அதற்கெதிராக புகார்கள் அளிக்க வேண்டும். அதை அவமானம் என்று கருதி அடங்கிவிடக்கூடாது. குறிப்பாக ஆபாசப் புகைப்பட சேட்டைகளுக்கு இலக்காகும் பெண்கள் அதை பெரும் அவமானமாகக் கருதாமல் அதை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் வெகு சிலரே அதைச் செய்கின்றனர். மார்ஃபிங் தொழில்நுட்ப அத்துமீறல் என்றிருந்தாலும் கூட நாம் இத்தகைய ஒரு நிலைக்கு ஆளாகிவிட்டோமே என்று மனம் புழுங்கி வருந்துவது தேவையில்லை.... இதுபோன்ற அத்துமீறல்களை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அடுத்து புதிய தலைமுறை பேட்டி... (காணொளி உள்ளது.).

ஒரு பெண் என்பதால் தொடுக்கப்பட்ட பாலியல் அவதூறு, இழிவு படுத்தும் பேச்சுக்கள், தாயை ஆபாசமாக பழிக்கும் சொற்கள் கண்டிக்கத்தக்கவையே. எதிர்தரப்பின் பேச்சுக்கள் ஆபாசமாகக் கருதப்படுவதுபோல், இந்தியாவின் சாதியச் செயல்பாடு குறித்த புரிதலின்றி தான் வளர்ந்திருக்கும் ஆதிக்க சாதி, மேட்டுக்குடி வர்க்கப் பார்வையில் சின்மயி வைத்த கருத்துக்களும் ஆபாசமானவையே. குறிப்பாக “so called oppressors’ என்கிற பதம்.

Reply · Report Post