ஒரு நேரம்..
பெருக்கெடுத்து ஓடுகிறது
கண்மாய் உடைத்து செல்லும்
வெள்ளம் போல..

ஒரு நேரம்
வருடி செல்கிறது
குழலில் இருந்து ஒழுகும்
மெல்லிசையைப் போல

வலமென்றோ இடமென்றோ
கைக்காட்ட முடிவதில்லை.

மேலென்றோ கீழென்றோ
இடைக்கோடிட முடிவதில்லை.

அவள்
குரலின் கதகதப்பையும்
அன்பின் வெதுவெதுப்பையும்
என்னுள்ளே புதைத்துவிடுகிறேன்.
வெடித்து வெளிவரும் நாளில்
மடிந்து போயிருக்க வேண்டும் நான்.

Reply · Report Post