kuruvu · @kuruvuu
20th Dec 2011 from Twitlonger
எங்கோ யாரோ பேசிய
வாய் வழி வார்த்தைகள் தான்
"ம்" என்று தலையசைத்தும்
"ச்சீ" என்று முகம் சுழித்தும்
சில சமயம் குமுறலும்
பல சமயம் குமட்டலுமாய்
நமக்கு நாமே தீர்ப்பெழுதிக் கொண்ட
வெள்ளையுடை நிதிபதிகளாய் நாம் ...
முகம் சுழித்த வார்த்தைகள்
சூழ்நிலைக்கொண்டு
நம் நாவில் எழும்போது
பேனா முனைக் கடித்த
கறைபடிந்த பற்கள் போல்
சிரிக்க மறுக்கிறது
எதிர்படுபவர்களிடம் ...
மையற்ற பேனா கொண்டு
வெள்ளைத்தாளில் துளையிடும்
மாசற்ற மனிதர் இவர்கள் ...
@kuruvuu